முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

தர்மபுரி, பிப்.26: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட தேர்தல் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவராக கிருஷ்ணாபுரம் பள்ளியின் இயற்பியல் முதுகலை ஆசிரியர் சக்திவேல், மாநிலத் துணைத்தலைவராக அதியமான் கோட்டை மகளிர் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் சரவணன், மாவட்ட செயலராக கடகத்தூர் பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியர் பாக்கியராஜ், பொருளாளராக இலக்கியம்பட்டி பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் கலைவாணன், பாலக்கோடு கல்வி மாவட்ட தலைவராக சுதாகர், பொருளாளராக முனிரத்தினம், மாவட்டத் துணைத் தலைவராக சிந்தல்பாடி பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் கருணாநிதி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்தலை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், முன்னாள் மாவட்டத் தலைவர் முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நாராயணன், ஏரியூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகுமார், பொம்மிடி ஆண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி, செல்லமுடி பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால், நாயக்கம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசேகர் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையர்களாக இருந்து, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.

Related Stories: