பள்ளி மாணவர்கள் சாதனைதர்மபுரி, பிப்.26: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கனரா வங்கி மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பள்ளிகளுக்கிடையே வினாடி வினா போட்டி நடந்தது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த போட்டிகளில் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து 300 மாணவர்கள், 142 குழுக்களாகப் பங்கு கொண்டனர். இப்போட்டியில் தர்மபுரி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் நிரஞ்சன் மற்றும் மிதுன் சூர்யா ஆகிய இருவரும் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும், அதிகப்படியான வினாக்களுக்கு விடையளித்து 7ம் வகுப்பு மாணவர்கள், அரவிந்த், ஹரிசங்கர் மற்றும் 8ம் வகுப்பு மாணவன் அகிலன் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.