கரூர், பிப். 20: கரூர்- கோவை சாலையில் சிக்னல் இயங்காததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் கரூரில் இருந்து ஈரோடு, கோவை சாலைகள் பிரியும் இடத்தில் உள்ள சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, பொள்ளாட்சி, தாராபுரம், திருப்பூர், பல்லடம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூந்துகளும், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியை தாண்டி, இரண்டு பகுதிகளாக சாலைகளில் பிரிந்து செல்கிறது.இந்நிலையில், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் ஒரே சாலையில் கரூரை நோக்கி பயணிக்கிறது.இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் அனைத்து வாகனங்களும் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.