காரிமங்கலம், பிப்.19: காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடு மற்றும் தேங்காய் ஆகியவற்றை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்கினறனர். காரிமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஆடு, மாடு மற்றும் தேங்காயை வாங்கிச்செல்கின்றனர். நேற்று கூடிய சந்தையில் ஜோடி மாடுகள் ₹20 ஆயிரம் முதல் ₹45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. ஆடு ஒன்று ₹6 ஆயிரம் முதல் ₹14 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதேபோல் 75 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு வந்தது. அளவுக்கேற்ப தேங்காய் ஒன்று ₹12 முதல் ₹25 வரை மொத்தம் ₹15 லட்சத்துக்கு விற்பனையானது. இது கடந்த வார விலையை விட தேங்காய் ஒன்றுக்கு ₹2 அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.