கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தர்மபுரி, பிப்.19:  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வாணியர் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் காந்தி தலைமை வகித்தார். தென்னிந்திய வாணியர் சங்க செயலாளர் சங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கினார். விழாவில் பொதுச்செயலாளர் வாசுதேவன், பொருளாளர் கண்ணபிரான், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ பட்டாபி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: