பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, பிப்.19: பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், குறைந்தபட்ச பென்ஷன் ₹7850 வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச பஸ், குடும்பநல நிதி உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கவும், தங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்க வலியுறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சண்முகம், ஜானகி ராமன், ராசா, குணசேகரன், சேகர், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: