கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.19: தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக சார்பில், ஆலோசனை கூட்டம் மற்றும் படத்திறப்பு விழா, மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சேகர், குமரேசன், செந்தில்குமார், திருமால் செல்வன், பசுவராஜ், ஸ்ரீகாந்த், சரவணன், சங்கர், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அரூர் ராமசாமி கவுண்டர், நித்தியானந்த கவுண்டர், காசி கவுண்டர் உருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.இக்கூட்டத்தில், மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், வேலுசாமி, முன்னாள் எம்பி பாரிமோகன், அரசாங்கம், பாடி செல்வம், பெரியசாமி, இமயவர்மன், செந்தில், முருகசாமி, மாது, வணங்காமுடி, திருவேங்கடம், பொன்மலர் பசுபதி, சின்னசாமி, ராஜேந்திரன், கயிலைராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அய்யப்பன் நன்றி கூறினார்.

Related Stories: