முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

தர்மபுரி, பிப்.18: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு உயர்கல்வி அமைச்சர் பரிசு வழங்கி  பாராட்டினார்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிக்கும் விழா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவில், உயர்கல்வி அமைச்சர் ேக.பி.அன்பழகன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரூர் எம்எல்ஏ  சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வெற்றிவேல், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பியூலா ஜேன் சுசீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: