சிந்தல்பாடி ரயில்வே பாலத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு

கடத்தூர், பிப்.18: கடத்தூர் அருகே சிந்தல்பாடி ரயில்வே பாலத்தில் விபத்தை தடுக்க, வேகத்தடை அமைக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, சிந்தல்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக தர்மபுரி- அரூர், மொரப்பூர்- பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு சாலைகளை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. இதனால், தினசரி இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்ற வருகிறது. பாலத்தில் வாகனங்கள் வந்து செல்லும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில், கடந்த சில நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சிந்தல்பாடி ரயில்வே பாலத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2 இடங்களில் நேற்று வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: