நாங்குநேரி, பிப். 13: ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்குள் புகுந்து பிடிஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் பார்ப்பரம்மாள்புரம் மற்றும் பதக்கம் கிராமங்களுக்கு ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதனிடையே பதக்கம் பகுதியை சேர்ந்த சிலர் தங்களது சொந்த நிலங்களை அரசுக்கு கொடுத்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பார்ப்பரம்மாள்புரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பதக்கம் கிராம மக்கள், நாங்குநேரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பதக்கம் கிராமத்திலேயே ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.