மூதாட்டியிடம் நகை பறிப்பு

போச்சம்பள்ளி, பிப்.11: போச்சம்பள்ளி அடுத்துள்ள பூதானூர் பகுதியை சேர்ந்தவர் கமலம்மா(70). இவர், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று முன்தினம் காய்கறி வாங்க சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 பெண்கள், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, உங்கள் நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். இதனால் பயந்த கமலம்மா தான் அணிந்திருந்த செயின், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 4.5 பவுன் நகைகளை கழற்றி பேப்பரில் மடித்தார். இதைபார்த்த அப்பெண்கள், நாங்கள் பத்திரமாக மடித்து தருகிறோம் என கூறி நகைகளை வாங்கி, ஒரு பேப்பரில் கட்டி கொடுத்தனர். அதனை வாங்கி கொண்ட கமலம்மா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அதில் நகைகளுக்கு பதிலாக கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: