கும்பகோணம், பிப்.7: கும்பகோணம் தாசில்தாரிடம் காவேரிநகர் பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கும்பகோணம், டாக்டர் மூர்த்தி சாலையிலுள்ள, செல்லம் நகர் மற்றும் காவேரி நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மூலம் தினசரி காலையில் இந்நகரில் உள்ள வீடுகளுக்கு வந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. எங்களிடமிருந்து நகராட்சி வரி வசூலில், குப்பைகளை அள்ளுவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவன காண்டிராக்ட் ஊழியர்கள் வராததால் தெரு முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளது. செல்லம்நகர் மற்றும் காவேரி நகரில் முறையான துப்புரவு பணிகள் இல்லாததால் நகர் முழுவதும் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.