பேராவூரணி, மார்ச் 11: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாசில்தாராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இதற்கு முன் பட்டுக்கோட்டை வட்ட அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி, தாசில்தாராக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். பேராவூரணி தாசில்தாராக பணியாற்றிய சுப்பிரமணியன் பட்டுக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
