தர்மபுரி, பிப்.7: தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அளவில் ரேஷன்கடை நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (8ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், நடத்தப்படும் பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் தாலுகா அளவில் குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம், நாளை (8ம் தேதி) காலை 10 மணிக்கு அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது.