திருவள்ளூர், பிப். 7: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடம் வாங்கப்படும் வைக்கோல் வேலூர், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இருந்தாலும் நிலத்தடி நீரைக்கொண்டு பேரம்பாக்கம், இருளஞ்சேரி உட்பட பல பகுதிகளில் நெல் பயிர் செய்யப்பட்டிருந்தது. இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் முகாமிட்டு வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு லோடு வைக்கோல் ₹9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் வழியாக தினசரி 20க்கும் மேற்பட்ட லாரிகள் வைக்கோலை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி பாசன விவசாய நிலங்கள் வறண்டு விட்டது.