சத்திரஞ்ஜெயபுரத்தில் முறையான பராமரிப்பின்றி நீர்வளத்துறை ஏரி மதகு சேதம்

திருத்தணி, மார்ச்12: சத்திரஞ்ஜெயபுரத்தில் முறையான பராமரிப்பின்றி, நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி முறையான பராமரிப்பின்றி மதகு பகுதி சேதமடைந்து தண்ணீர் கசிந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருத்தணி அருகே சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் ஏரி நீர் ஆதாரமாக பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏரி முறையான பராமரிப்பின்றி ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து, ஏரிக்கரை புதர் மண்டி உள்ளது. ஏரி மதகு பகுதியில் சேதமடைந்து கடந்த 2 ஆண்டுகளாக ஏரிநீர் கசிந்து வீணாகி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘சத்திரஞ்ஜெயபுரம், மேதினபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஏரி நீர் ஆதாரமாக பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். ஏரிநீர் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர பெரும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரி மதகு பகுதியில் ஏற்பட்ட ஓட்டை அடைக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இருப்பினும் முறையாக மதகு சேதம் சரி செய்யாமல் விடப்பட்டதால் மீண்டும் மதகு பகுதியில் கசிவு ஏற்பட்டு 2 ஆண்டுகளாக ஏரி நீர் கசிந்து விளை நிலங்களில் வீணாகி வருகிறது. ஏரி தூர்வாரி சீரமைத்து மதகு சீரமைக்க வேண்டும் என்று பலமுறை நீர்பாசனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியும் நிதி பற்றாக்குறை கூறி காலம் கடத்தி வருவதாக குற்றம் சாட்டினர். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கும் வகையில் மதகு பகுதியில் சேதம் சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: