சோழியம்பாக்கம் கிராமத்தில் அதிமுக துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 14: திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக தேர்தல் வாக்குறுதி குறித்து துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அதிமுக நிர்வாகிகள் வெங்கட்ரமணா, முன்னாள் நகர செயலாளர் மு.க.சேகர், இமயம் மனோஜ், ஒடை ராஜேந்திரன் சுகுமார், நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரன் சோழியம்பாக்கம், ஏனாதி மேல்பக்கம், அயநெல்லூர் பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை குறித்து பேசினார். இதில், 80க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: