குளித்தலை, பிப்.4: குளித்தலை கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் 2 தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பேச்சு பயிற்சி, ஓவிய பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி, கணினி அடிப்படை பயிற்சி, இந்தி எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி இடம் பெறுகிறது. இப்பயிற்சி குளித்தலை கிளை நூலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் 5.30 மணி வரை தொடர்ந்து 9 வாரங்கள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறுதானிய உணவுகளும், ஊக்க பரிசுகளும் வழங்கப்படுகிறது.