கரூர், ஜன. 24: புதிய கரும்பு ரகத்தை பயிரிட்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறவேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது
கரும்பு விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசால், கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடனும், பல்வேறு கரும்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் வகையில் சிஓ11015 என்ற வகையான கரும்பு கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 86032 என்ற ரக கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த கரும்பின் மூலம் வரப்பெறும் சர்க்கரையின் அளவைக்காட்டிலும், 0.5 சதவீதம் கூடுதல் இனிப்புச்சுவையை சிஓ 11015 என்ற வகையான கரும்பு தருகின்றது. மற்ற கரும்புகள் முழுமையாக விளைய 12 மாதங்கள் ஆகும். ஆனால் 11015 என்ற புதிக ரக கரும்பு 8 மாதம் முதல்12 மாதத்திற்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது.