அரூர், ஜன.23: நெடுஞ்சாலை துறை சார்பில் ₹1.3 கோடி மதிப்பிலான 4 சாலை பணிகளை கோட்டப்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். அரூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, அரூர், மொரப்பூர் சாலையில் சோலைக்கொட்டாயில் அமைந்துள்ள குறுகிய வளைவுகளை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ₹45 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி, ₹30 லட்சம் மதிப்பில் ஆண்டியூர், அம்மாபேட்டை சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகளையும், ₹4 லட்சம் மதிப்பில் அம்மாபேட்டை - தாம்பல் சாலை மற்றும் சிறுபாலப் பணிகள் என மொத்தம் ₹1.03 கோடி மதிப்பிலான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தனசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்