காரிமங்கலம், ஜன.23: காரிமங்கலம் நகருக்குள் அசுர வேகத்தில் சென்று வரும் தனியார் பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள், காரிமங்கலம் நகருக்குள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் இருந்து ராமசாமி கோயில் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வரை, தனியார்கள் பஸ்கள் ஏர்ஹாரன்களை ஒலித்தபடி, அதிவேகமாக செல்கின்றன.