வெள்ளியணை அருகே கல்லூரி மாணவரிடம் தகராறு 4 பேர் கைது

கரூர், ஜன. 20: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கல்லூரி மாணவரிடம் தகராறில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கரூர் மில்கேட் பகுதியை சேர்ந்தவர் ரிஷி(18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி அன்று வெள்ளியணையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரிஷி சென்றார். அன்று இரவு வெள்ளியணையில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு திரும்பிய போது, இதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் உட்பட நான்கு பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் காயமடைந்த ரிஷி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரின் புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் பாலசுப்ரமணியன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: