தர்மபுரி, ஜன.19: தர்மபுரியில் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு, டாஸ்மாக் மேலாளர் பூட்டு போட்டார். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை ராமக்காள் ஏரி அருகே தனியார் தாபா ஓட்டல் உள்ளது. இந்த தாபா ஓட்டலில் குடிபோதையில் தகராறு நடப்பதாக, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தாபாவிற்கு சென்றனர். அங்கு தகராறு செய்துக்கொண்டவர்களிடம் போலீசார் சமாதானப்படுத்தினர். அப்போது தாபா ஓட்டலில் 2 பார் இருந்துள்ளது. அதில் ஒன்று உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பார் நடத்தும் நபர்களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் செய்யும் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வளையதளங்களில் பரவியது.