குளித்தலை, ஜன.13: குளித்தலை அடுத்த இரும்பூதிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் திட்டத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருகிலுள்ள வேளாண் காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் இரும்பூதிபட்டி பள்ளி தலைமை ஆசிரியை உஜிஇரும்பூதிபட்டி பள்ளி தலைமை ஆசிரியை சுசிலாதேவி தலைமையில் வேளாண் காட்டுப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் சேகர் மற்றும் மற்றும் ஆசிரியர்கள் பஞ்சவர்ணம் ரவிக்குமார் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் பெண் தற்பாதுகாப்பு குறித்த பயிற்சி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் பாதுகாப்பு சேவை பெண் பாலியல் கொடுமை குழந்தை தொழிலாளர் குறித்து பல்வேறு விளக்கங்களை திரை மூலம் காண்பித்து விளக்கம் அளித்தனர்.