கரூர், ஜன. 12: டெல்லி பல்கலை.மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்களை தாக்கிய ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பயங்கரவாதிகளை கைது செய்யக்கோரி கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்றது.