எம்ஜிஆர், ஜெ.சிலைக்கு மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்கள் மரியாதை

தர்மபுரி, ஜன.12:  தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த யசோதா, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவராக நீலாபுரம் செல்வம், கடத்தூர் ஒன்றியக்குழு தலைவராக உதயா மோகனசுந்தரம், காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக சாந்திபெரியண்ணன், பாலக்கோடு ஒன்றியகுழு தலைவராக பாஞ்சாலை கோபால், அரூர் ஒன்றியக்குழு தலைவராக பொன்மலர் பசுபதி, ஏரியூர் ஒன்றியக்குழு தலைவராக பழனிசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதே போல் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவினர் நல்லம்பள்ளி ஒன்றிய குழுதலைவராக மகேஸ்வரி, பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவராக கவிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அனைவரும் தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து, உயர்கல்விஅமைச்சர் அன்பழகன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், எம்ஜிஆர் அணி செந்தில்குமார், அங்குராஜ், பாமக, தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: