தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த யசோதா, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவராக நீலாபுரம் செல்வம், கடத்தூர் ஒன்றியக்குழு தலைவராக உதயா மோகனசுந்தரம், காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவராக சாந்திபெரியண்ணன், பாலக்கோடு ஒன்றியகுழு தலைவராக பாஞ்சாலை கோபால், அரூர் ஒன்றியக்குழு தலைவராக பொன்மலர் பசுபதி, ஏரியூர் ஒன்றியக்குழு தலைவராக பழனிசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதே போல் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவினர் நல்லம்பள்ளி ஒன்றிய குழுதலைவராக மகேஸ்வரி, பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவராக கவிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.