தாதனூர் ஊராட்சி தலைவருக்கு பொது மக்கள் வாழ்த்து

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.12: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதனூர் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஆதிமூலம், ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தாதனுர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாசன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், சின்னராஜ், தமிழரசி மணி,     விஜயன், செந்தாமரை, காமராஜ், சூரியகலா மாதப்பன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு தலைவராக பொறுப்பேற்று கொண்ட அமுதா ஆதிமூலத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: