வேப்பிலைப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடத்தூர், ஜன.10: கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டியில், மறைந்த திமுக முன்னாள் மொரப்பூர் ஒன்றிய குழு சேர்மன் வேப்பிலை செழியனின் 23ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் வேப்பிலைப்பட்டி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் நீர் அழுத்தம், கண் குறைபாடு, பார்வை திறன் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை பெற்றனர். இந்த முகாமில், தர்மபுரி வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஜீவா செழியன், வெற்றிவேந்தன், பெரியார்தாசன், ஈழவேந்தன், கனகரத்தினம், தனபால், தமிழரசன், ஆதிமூலம், ஜெய்சங்கர், கணேசன், வினோபாஜி, சத்ரபதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: