சாத்தான்குளத்தில் அஞ்சலகம் மூடல்

சாத்தான்குளம், ஜன.9: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து  சாத்தான்குளம், முதலூர், புத்தன்தருவை, படுக்கபத்து உட்பட பல்வேறு அஞ்சலக அலுவலகங்கள் முழுவதும் இயங்கவில்லை. இதனால் அனைத்து அஞ்சலங்கங்களும் மூடிக்கிடந்தன. மேலும் வங்கிகளுக்கு ஊழியர்கள் குறைவாக வந்திருந்தனர். சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் பகுதி அளவில் அலுவலகங்கள் இயங்கின.

Related Stories: