இலக்கியம்பட்டி பஞ். தலைவர் பதவியேற்பு

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற தலைவராக சுதா ரமேஷ் மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. விழாவில் உதவி தேர்தல் அலுவலர் முத்துவேல், புதிய ஊராட்சி மன்ற தலைவராக சுதா ரமேஷ் மற்றும் புதிய வார்டு உறுப்பினர்களாக சீனிவாசன், புவனேஸ்வரி, தமிழரசி, சுமதி, சித்ரா, வெண்மதி, அசோக்குமார், விஜியகுமார், காமராஜ், தீபா, கங்காதரன், இளங்கோவன், ஜெயலட்சுமி, புகழ்மணி, வித்யா உள்ளிட்ட 15 பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதையடுத்து ஊர்பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் செயலாளர் சரவணன், திமுக தர்மபுரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: