அரக்கோணம், ஜன.3: அரக்கோணம் சப்-டிவிஷனில் சாலையோர ஆக்கிரமிப்புகள் வரும் 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும், அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சப்-டிவிஷனில் புத்தாண்டு தினத்தையொட்டி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அரக்கோணம் சப்-டிவிஷனில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த குற்றச்செயல்கள் குறித்து டிஎஸ்பி மனோகரன் கூறியதாவது: அரக்கோணம் சப்-டிவிஷனில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், வழிப்பறி, ரவுடிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.