நர்சிங் மாணவியை கடத்திய இன்ஸ்டாகிராம் நண்பருக்கு வலை போலீசார் விசாரணை

வேலூர், ஜூன் 14:வேலூரில் படிக்கும் நர்சிங் மாணவியை கடத்தியதாக இன்ஸ்டாகிராம் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் நெல்வாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாணவி கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு வரவில்லையாம். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது உறவினர், நண்பர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வேலூர் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதில் விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் எங்கள் மகளுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக பேசி வந்துள்ளனர். அந்த நபர் எங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சிங் மாணவி மற்றும் அவரை கடத்தியதாக கூறப்படும் விழுப்புரம் வாலிபர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post நர்சிங் மாணவியை கடத்திய இன்ஸ்டாகிராம் நண்பருக்கு வலை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: