சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி

குடியாத்தம், ஜூன் 9: குடியாத்தம் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 8 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், குடியாத்தம் அடுத்த பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வினோத்(20) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைக் கூறி நேற்று அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது குடியாத்தம் அருகே ஆசைவார்த்தை கூறி appeared first on Dinakaran.

Related Stories: