உள்ளாட்சி தேர்தல் எதிரொலி உழவர் சந்தைக்கு இன்று விடுமுறை

தர்மபுரி, டிச.27:  தர்மபுரியில் இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி, தர்மபுரி உழவர் சந்தைக்கு இன்று(27ம் தேதி) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நான்கு ரோடு அருகே உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு தினசரி 105 விவசாயிகள் சுழற்சி முறையில், 35 டன் காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினசரி காய்கறி வாங்கிச் செல்கின்றனர். ஆண்டு முழுவதும் உழவர் சந்தை இயங்கி வரும் நிலையில், இன்று (27ம் தேதி) நடக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி, தர்மபுரி உழவர்சந்தைக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவையொட்டி அனைத்து விவசாயிகளும் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என உழவர் சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: