காரிமங்கலம், டிச.27: காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்துக்கழக நேரம் காப்பாளர் அறையை திறக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், பாலக்கோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறது. அனைத்து அரசு பேருந்துகளும், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்வதற்கு, அரசு பர்மிட் வழங்கியுள்ளது. காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ேபருந்துகள் வந்து செல்வதை கண்காணிக்கும் பொருட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு நேரம் காப்பாளர் அறை திறக்கப்பட்டது.