தர்மபுரி, டிச.27: நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் தீ பிடித்து கரும்பு எரிந்து நாசமானது. நல்லம்பள்ளி வட்டம் சிவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவீந்திரன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், கரும்பு நடவு செய்துள்ளார். இந்த கரும்பு தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கரும்பு வயலின் ஒருபகுதியில் இருந்து புகை வந்தது. சற்று நேரத்தில் அப்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அறுவடை நிலையை எட்டிய வயல் என்பதால், காய்ந்த சோகைகள் அதிக அளவில் இருந்தது.