கரூர், டிச. 17: கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் கிராமம் தேவசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: எங்கள் ஊரில் 300 ஓட்டுக்கள் உள்ளன. காமராஜர் காலத்தில் இருந்து எங்கள் ஊரில் வாக்களித்துள்ளோம், தற்போது உள்ளாட்சி தேர்தலில் தேவசிங்கம்பட்டி வாக்குச்சாவடியில் இருந்து அருகாமையில் பாப்பன்பட்டிக்கு சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியது உள்ளது. பாப்பன்பட்டி, திருமேனியூர் ஆகிய இரண்டு இடங்களுக்கு வாக்குசாவடி மாற்றம் செய்யப்பட்டு விட்டது.