தர்மபுரி, டிச.12: தொப்பூர் வெள்ளக்கல் சமத்துவத்திற்கு அருகே காப்பு காட்டில், அடையாளம் தெரியாத சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண், புளியமரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் ேபரில், தொப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, தர்மபுரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.