தர்மபுரி, டிச.12: பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பி.சி., எம்பிசி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும், தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளில், குடும்ப ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக, ஒருவருக்கு ஆண்டிற்கு ₹2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.