\கரூர், டிச. 12: கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் அருகே வேட்புமனு தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் விபர அறிக்கையில் நோட்டரி பப்ளிக் என்பதற்கு பதிலாக ரோட்டரி கிளப் என குறிப்பிட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் உள்ள 8 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 16ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்க நுழைவு வாயில் பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கையுடன் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிக்கை ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் தாந்தோணி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வேட்பாளர்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்து நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது.