மின்இணைப்பு வழங்காததால் ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் விநியோகம் இல்லை

கடத்தூர், டிச.10: கடத்தூர் அருகே தாளநத்தம் பகுதியில், மின் மோட்டார்களுக்கு மின் இணைப்புகள் வழங்காததால், 8 மாதமாக ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சியில், 5ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, தாளநத்தம் பகுதியில் 2ஆழ்துளை  கிணறும், நொச்சிக்குட்டை பகுதியில் 1 ஆழ்துளை கிணறும் ₹6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் மோட்டார்களுக்கு, கடந்த 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல், மின்வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் தாளநத்தம், அய்யம்பட்டி, நொச்சிக்குட்டை, காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மின்மோட்டார்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க, ஊராட்சி நிர்வாகமும், மின் வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: