விபத்தில் தொழிலாளி பரிதாப பலி

கிருஷ்ணகிரி, டிச.10: சூளகிரி  அருகே ஓமதேபள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால் (40). கூலி தொழிலாளி. இவர், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: