தர்மபுரி, நவ.29:தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், அரசு பள்ளிகளில் பிளஸ்1 பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஸ்கோப் எனும் மாவட்ட அளவிலான செயல்திட்டங்கள் அறிக்கை சமர்ப்பித்தல் போட்டி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேலு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஏற்கனவே, ஒன்றிய அளவிலான அறிக்கை சமர்ப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், இதில் பங்கேற்றனர். இதில், 7 பாட பிரிவுகளில் 5 பேர் வீதம், தேர்வு பெற்ற 35 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.