பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, நவ.22: தர்மபுரியில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில், நேற்று பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் ராமமூர்த்தி ராவ் தலைமை வகித்தார். கூட்டத்தில், 1.1.2017 முதல் ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களின் சம்பள மாற்றத்தையும், ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றத்தையும் பிரிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மருத்துவ வசதி பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில துணை தலைவர் வேடியப்பன், கவுரவ மாவட்ட தலைவர் சுந்தரம், மாவட்ட தலைவர் முனியன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: