காரிமங்கலம், நவ.22: காரிமங்கலம் மகபூப் நகரில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காரிமங்கலம் பேரூராட்சி, 7வது வார்டு மகபூப் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறு தரை மட்டத்தில் அமைக்கப்பட்டு, அதன் மேல் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.