கரூர், நவ. 19: கடவூர் தாலுகா தே.இடையபட்டி கிழக்கு கிராமத்தில் மயான பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.கடவூர் தாலுகா தே.இடையப்பட்டி கிழக்கு கிராமம் பொதுமக்கள் அளித்த மனு:எங்கள் கிராமம் தோன்றிய காலத்தில் இருந்தே பொது இடங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயான பாதையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதைக்கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். குளித்தலை டிஎஸ்பி பேச்சுவார்த்தையையடுத்து மறியல் கைவிடப்பட்டது. குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது.இதில் எடுத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஆண்டாண்டு காலமாக யார் யார் எது எதற்கு உபயோகப்படுத்தி வந்தார்களோ அதன்படி உபயோகிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கல்லடை ஊராட்சி பாரதிநகர், கீழவெளியூர் பொதுமக்கள்அளித்த மனு: