தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்ட சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவன்கோயிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், நெசவாளர்காலனி சிவன் கோயில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோயில், தீயணைப்பு நிலைய சிவன் கோயில், ஒட்டப்பட்டி லிங்கேஸ்வரர் கோயில், காரிமங்கலம் அருணேஸ்வரர் கோயில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோயில், வைத்தியநாதர் கோயில்,