கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா கோலாகலம்

கரூர், நவ. 12: பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.கரூர் கல்யாண பசுபதீஸ்வர சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழாவையொட்டி கல்யாண பசுபதீஸ்வரர், நாகேஸ்வரசுவாமி, கரியமாலீசுவரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருமேனி முழுவதும் அன்னம் சார்த்தி அன்னாபிஷேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.

Related Stories: