தேன்கனிக்கோட்டை, நவ.6: கெலமங்கலம் அருகே டூவீலர்கள் மோதியதில் வாலிபர் பலியானார். கெலமங்கலம் அருகே தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (35) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலைக்காக கெலமங்கலத்திருந்து அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது துளசி நகர் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, அவ்வழியே கெலமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த முனியப்பன்(27) என்பவர் டூவீலரில் எதிரே வந்துள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியது.