அரூர், நவ.6: அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வர்ணீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டு பழமையான ஸ்ரீவர்ணீஸ்வரர் கோயில் உள்ளது. பழங்கால ஓலைச்சுவடிகளிலும் இந்த தல வரலாறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் தீர்த்தமலை, அனுமன்தீர்த்தம், வர்ணதீர்த்தம் குளங்களில் நீராடினால் தீராத தோல் வியாதிகள் அனைத்து தீர்ந்துவிடும் என, அந்த ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகு பெருமை வாய்ந்த வர்ணதீர்த்தம் வர்ணீஸ்வரர் ஆலயத்தில் உள்ள குளம் சாக்கடை நீர் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.